Delhi மக்களுக்கு கோரிக்கை
கடந்த சனிக்கிழமையன்றும் (நவ. 22), இதே GRAP-3-ன் கீழ் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதப் பணியாளர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதித்து, மீதமுள்ளவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த ஆலோசனையும் CAQM-ன் வழிகாட்டுதலின் பேரில்தான் வழங்கப்பட்டது.
குப்பைகள் மற்றும் உயிரிப் பொருட்களை (biomass) திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும், தூசி மாசுபாடு குறித்து விழிப்புடன் இருக்குமாறும், விதிமீறல்களை ‘கிரீன் டெல்லி செயலி’ (Green Delhi app) மூலம் புகாரளிக்குமாறும் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.