மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், “தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும். அதற்காக நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது,” என்றார்.
மேலும், நகைச்சுவையாளருடன் கலகலப்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். மாணவர்கள் இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிய அறிவுறுத்தியதுடன், சிறிய தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என அறிவுறுத்தினார்.
அன்பின் மழையில் தல!

தோனியைப் பார்க்க ஏராளமான மக்கள் போஸ்டர்கள், புகைப்பட ஃப்ரேம்கள் மற்றும் பதாகைகளுடன் வந்ததால், பல்கலைக்கழகம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது.
2019ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடி வருகிறார் எம்.எஸ். தோனி.
அன்கேப்ட் வீரராக களமிறங்கும் அவருக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிக அன்பைப் பொழிகின்றனர் ரசிகர்கள். தோனியின் மீதான க்ரேஸ் துளியும் குறையவில்லை என்பதற்கு, பல்கலைக்கழகத்தில் நடந்த இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.