இப்படி ஜெயலலிதா மக்கள் நலனுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்தினார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகிய நால்வருமே மக்களால் ஓட்டு போட்டு முதல்வர் ஆனவர்கள்.
ஆனால், நான் உட்பட மற்றவர்கள் அப்பாயிண்மென்ட். எடப்பாடி பழனிசாமியைப் பற்றி நான் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எனக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றுக் கொண்டு, தற்போது சசிகலாவைப் பார்த்து ஏதோ குறைக்கிறது என்கிறார். அப்படிச் சொல்லலாமா? உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். அ.தி.மு.கவை அழித்த வரலாற்றுப் பெருமை இவர்களையே சாரும். என்னைப் பற்றியோ நான் கடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேச அவர்களுக்கு அருகதை இல்லை” என்றார்.