Father sentenced to life imprisonment for raping adopted daughter-வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை; சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

Spread the love

அத்துடன், தன் மகளிடம் ஆறுதலாகப் பேசி சிறுமிக்கு நடந்த கொடுமையைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்த தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் சுதா, எலக்ட்ரிசீயனை கைது செய்தார். 5 வேலை நாட்களில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டன. வழக்குப்பதிவு செய்த 29வது நாளான நேற்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறுமியின் வளர்ப்பு தந்தையே சிறுமியை வன்கொடுமை செய்ததால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

நெல்லை நீதிமன்றம்

நெல்லை நீதிமன்றம்

அத்துடன், தந்தையால், பாதிக்கப்பட்ட அவரது வளர்ப்பு மகளான 11 வயது சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும், அச்சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை அந்த தொகை, வங்கியில் டெப்பாசிட் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே மிக குறுகிய நாட்களில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கு இது என்கிறார்கள். .

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *