Grok: பெண்களின் ஆபாச படங்கள் உருவாக்கம்; பிரியங்கா சதுர்வேதி புகார் – மத்திய அரசு நடவடிக்கை|Big Trouble for X! Grok AI Under India’s Legal Scanner

Spread the love

மத்திய அமைச்சகத்தின் நடவடிக்கை

இதையடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் படி…

“கிரோக்கின் ஆபாச படங்கள் உருவாக்கம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023 ஆகியவைகளுக்குக் கீழ் சட்டத்திற்கு புறம்பானது.

இந்த உருவாக்கம் ஆபாசப் படங்களை ஊக்குவிக்கிறது… குழந்தைகளின் பாதுகாப்பைப் பாதிக்கிறது… பெண்களைக் கண்ணியமின்றி சித்தரிக்கிறது… இது ஒரு சைபர் குற்றம்.

அதனால், கிரோக் நிறுவனம் உடனடியாக ஆபாசப் படங்களை உருவாக்குவது மற்றும் மாற்றுவதை நிறுத்த வேண்டும்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அனைத்து ஆபாச கன்டென்டுகளையும் உடனடியாக நீக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கான அறிக்கையை அடுத்த 72 மணிநேரத்திற்குள் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எப்போதும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதை மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79-ன் கீழ், எக்ஸ் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்கலாம்.

அடுத்ததாக, எக்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தக் குற்றங்களைச் செய்த பயனாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *