பட்ஜெட்2024-25 முக்கிய அம்சங்கள் முழு விபரம்

Dinamani2f2024 072f4f1fcd9c 4652 4141 9628 A37a10a15f042frajnath20singh20nirmala20sitaraman20edi.jpg
Spread the love

பாராளுமன்றத்தில் இன்று (23ந்தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. ஆனால் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

முக்கிய அம்சங்கள்

2024-2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, 9 முன்னுரிமை துறைகளில் நீடித்த முயற்சி மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி,

  1. வேளாண் துறையில் உற்பத்தி மற்றும் மறுமலர்ச்சி
  2. வேலைவாய்ப்பு – திறன் பயிற்சி
  3. உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதி
  4. தயாரிப்பு & சேவைகள்
  5. நகர்ப்புற மேம்பாடு
  6. எரிசக்தி பாதுகாப்பு
  7. கட்டமைப்பு வசதி
  8. புதுமை கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி & மேம்பாடு
  9. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்

ஆகிய 9 துறைகள் வாயிலாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை  உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1283994.jpg

நடுத்தர வகுப்பினர் நலனில் கவனம்

  • இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவும், நிலையானதாகவும், 4 சதவீதம் என்ற இலக்கை நோக்கியும் செல்கிறது.
  • 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி அளித்தல் மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதற்காக, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் அடங்கிய பிரதமரின் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, 9 முன்னுரிமை துறைகள் வாயிலாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • 2024-25 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் நலனில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் சாகுபடி

  • விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக, உயர் விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவ நிலைகளையும் தாக்குப்பிடிக்கக் கூடிய, 109 புதிய பயிர் ரகங்களும், தோட்டக்கலை பயிர்களும் அறிமுகப்படுத்தப்படும்.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 1,000 தொழில் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்.
  • பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்தியத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு, ‘பூர்வோதயா’ எனப்படும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
  • மகளிர் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்க, மகளிர் மற்றும் சிறுமிகள் நலனுக்கான திட்டங்களுக்காக, ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற கட்டமைப்பு வசதி உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் தொகை

  • முத்ரா கடன் தொகை தற்போதுள்ள ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
  • 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு, 500 பெரிய தொழிற்சாலைகளில்  பணி அனுபவ பயிற்சி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டம் – நகர்ப்புறம் 2.0-ன் கீ்ழ், ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டில், ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டு வசதி தேவை பூர்த்தி செய்யப்படும்.
  • 25,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ நிலைகளையும் தாக்குபிடிக்கக் கூடிய இணைப்பு வசதியை ஏற்படுத்த, பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்தின் 4-ம் கட்டம் செயல்படுத்தப்படும்.
  • அடுத்த பத்து ஆண்டுகளில், ரூ 1,000 கோடி கூட்டு தொழில் மூலதனத்தில் விண்வெளி பொருளாதாரத்தை 5 மடங்கு விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • வருமான வரி செலுத்தும் 4 கோடி மாத சம்பளம் பெறும் தனிநபர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிவாரணம்.
  • புதிய வருமானவரி நடைமுறையின்படி நிலையான கழிவுத் தொகை ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படும்.
  • குடும்ப ஓய்வூதியத்திற்கான கழிவுத் தொகை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

Images

வருமான வரி

  • புதிய வரி நடைமுறையின் கீழ், பெரு நிறுவனங்கள் வரி
    58 சதவீதத்திற்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • தனிநபர் வருமான வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் புதிய வருமான வரி நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
  • புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க, அனைத்து தரப்பையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் மீதான ஏஞ்சல் வரி கைவிடப்படுகிறது.
  • முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான பெரு நிறுவன வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • சம்பளம் வழங்குமிடத்தில் பிடித்தம் செய்யப்படும் 5 சதவீத  வரி, 2 சதவீத வரி பிடித்த நடைமுறையுடன் இணைக்கப்படும்
  • குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் பயனடையும் விதமாக, மூலதன ஆதாய விலக்கு உச்சவரம்பு, ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
  • எக்ஸ்ரே பேனல்கள், செல்போன்கள் மற்றும் பிசிபிஏ-க்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களின் விலையை குறைக்கும் விதமாக அவற்றின் மீதான சுங்க வரி
    6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

வருமான வரி விகிதம்

வருமான வரி விகிதம் வருமாறு:

Ok(1)

 

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *