நெல்லை மாவட்டம், பாலாமடையைச் சேர்ந்தவர் சுதாகர். இவரும் பக்கத்து ஊரான சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இருவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பேச்சியம்மாள், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
குழந்தைகளை தனது உறவினரின் பராமரிப்பில் விட்டுள்ளார். குடும்பச் செலவுகளுக்காக தனியார் விடுதியில் தங்கியிருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் பேச்சியம்மாள்.

வாரந்தோறும் குழந்தைகளை பார்ப்பதற்காக ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஊர் பெரியவர்களின் முன்னிலையில் சுதாகர் பேசி மனைவியையும், குழந்தைகளையும் தன்னுடன் அனுப்புமாறு பேசியுள்ளார். ஆனால், பேச்சியம்மாள் வர மறுத்துள்ளார். இந்த நிலையில், குழந்தைகளை பார்ப்பதற்காக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் இருந்து சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். சந்திப்பு பேருந்து நிலையத்தில் அவர் இறங்கியதும் சுதாகர் அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.