அனுதாபத்தைத் தேடுவதல்ல தனது நோக்கம். மாறாக, இதேபோன்ற அழுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்களை தமக்காக நிற்கவும், தங்கள் சொந்த அபிலாஷைகளில் கவனம் செலுத்தவும் ஊக்குவிக்க விரும்புவதாக’ அவர் கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், “உங்கள் சுதந்திரம் முடியை விட மேலானது”, “உங்கள் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுகிறோம்” என அந்தப் பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
ஒரு பயனர், “பெண்கள் தங்களுக்காகத் தாங்களே எழுந்து நிற்பது எனக்கு மிகவும் பிடிக்கும், தைரியமாக இரு பெண்ணே” என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், “உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்… நீ நினைத்த வாழ்க்கையை வாழ்,” என்று அவரது கனவுகளைத் தொடர ஊக்கமளித்துள்ளார்.
பலர் இந்த தனிப்பட்ட முடிவின் பின்னாலுள்ள தைரியத்தைக் குறிப்பிட்டு, “உங்கள் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்” என்றும், “நீங்கள் செய்தது சரிதான், முடியை விட நமது சுதந்திரம் அதிக மதிப்புடையது” என்றும் பதிவிட்டுள்ளனர். “இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுக்கள்” மற்றும் “உன்னைப் பெருமையாக நினைக்கிறேன் சகோதரி” போன்ற வாழ்த்துகளும் அவருக்குக் குவிந்த வண்ணம் உள்ளன.