தமிழகத்தில் பல்வேறு ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த், கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஞ்சித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையராகவும் , கந்தசாமி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ராமு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.