அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றிருக்கிறார் .

விருதை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, “இந்தியாவில் இதற்கு முன் ஒரு இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறேன். அதில் தோற்றிருக்கிறோம். இந்த முறை மீண்டும் ஒரு வாய்ப்பில் வென்றிருக்கிறோம்.
கடவுளின் அருளால் நாங்கள் சாதித்திருக்கிறோம். டி20 க்களில் என்னை எப்படி மதிப்பிட்டுக் கொள்ள வேண்டுமென எனக்கு தெரியும். என்னுடைய ஆட்டத்துக்காகவும் தருணத்துக்காகவும் காத்திருப்பேன்.