இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அஸ்ஸாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489, இந்திய அணி 201 ரன் எடுத்தன.
288 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.