தென்னாப்பிரிக்கா 34 ஓவர்களில் 228 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழக்க ஆட்டத்தில் இந்தியாவின் கை மீண்டும் ஓங்கியது.
இப்படியான சூழலில் டெய்ல் எண்டர்ஸை ஈஸியாக காலி செய்துவிட்டு ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கலாம் என்றிருந்த இந்திய பவுலர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் கார்பின் போஷ்.
பிரெனலன் சுப்ராயன், நந்த்ரே பர்கருடன் 40+ ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அரைசதமும் அடித்தார்.
இறுதியாக கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது.
67 ரன்களுடன் கிரீஸில் அச்சுறுத்திக் கொண்டிருந்த கார்பின் போஷ், அர்ஷ்தீப் சிங் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால், பந்தோ ரோஹித்தின் கைகளில் தஞ்சமடைய 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
சதமடித்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இன்றைய போட்டி குறித்த உங்கள் கருத்தைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்