இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் ரன் வேகம் குறையவில்லை. பிரீட்ஸ்கே தேவையான இடத்தில் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார்.
தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளுக்கு 300-ஐக் கடந்த சென்றுகொண்டிருந்த வேளையில், பிரீட்ஸ்கேயை 68 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் பிரசித்தி கிருஷ்ணா.
அடுத்து வந்த மார்கோ யான்செனை 2 ரன்களில் அர்ஷ்தீப் அவுட்டாக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 31 தேவை என்ற சூழலில் டோனி டி சார்ஸி ரன் ஓடுகையில் எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பு ஏற்பட்டு களத்திலிருந்து வெளியேறினார்.

கேஷவ் மகராஜ் களத்துக்குள் வந்தார். அப்போது ஆல்ரெடி கிரீஸில் இருந்த கார்பின் போஷ் கடந்த போட்டியைப் போலவே இப்போட்டியிலும் இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கினர்.
தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 5 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா வீசிய 46-வது ஓவரில் போஷ் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் எளிதாக 9 ரன்கள் வந்தது.
அப்படியே அழுத்தம் இந்தியாவின் பக்கம் திரும்பு வேளையில் அர்ஷ்தீப் உள்ளே வந்து 47-வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டும் கொடுத்து கட்டுப்படுத்தினார்.
அதற்கடுத்த ஓவரில் போஷும், மகாராஜும் நிதானமாக சிங்கிள் சிங்கிளாக ஓடியே 7 ரன்களை சேர்த்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 12 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட அவர்கள் இருவரும் 49-வது ஓவரில் பதட்டமே படாமல் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நீதமாக 5 ரன்கள் சேர்த்தனர்.
கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் தேவைப்பட அதை முதல் இரு பந்திலேயே எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரை 1 – 1 என தென்னாப்பிரிக்கா சமன் செய்திருக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.