சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா.
பின்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறித்து அவர் கூறுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால், 23 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும். ஆனால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன்.
நான் அதிகமாக பலத்துடன் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன் என்று உணர்ந்தேன். அதற்குப் பிறகு ஆட்டத்தின் போக்கில், பந்தை சரியான நேரத்தில் அடித்து சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று உணர்ந்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில், இது ஒரு நல்ல போட்டி. ஏனெனில் என் ரிதத்தை தொடர்ந்து வைத்திருக்க இது உதவியது. கடந்த சில போட்டிகளில் நான் நினைத்தபடி விளையாட முடியாமல் போனது. அதனால் இப்போது மிகவும் திருப்தியாக இருக்கிறேன்.” என்றார்