India – US Trade Deal: காங்கிரஸ் விட்டதை மீட்டு, உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர்த்தும் மோடி: அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணி | An Opinion on India – US Trade Deal by BJP SG Suriya

Spread the love

  1. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, ‘என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்’ என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது.

  1. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம்.

இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவதற்காக அல்ல; நாளை ஒரு பக்கம் தடைபட்டாலும், மறுபக்கம் நம் தேவைகள் பூர்த்தியாகும் என்பதை உறுதி செய்வதற்காகவே! இது ஒரு விவேகமான முதலீடு.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

காங்கிரஸ் காலத்துத் தவறுகளும், தற்போதைய திருத்தங்களும்

இன்று ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த வர்த்தகத் தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில், ‘Free Trade Agreements’ (FTA) என்ற பெயரில் ஆசியான் (ASEAN), கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

  • காங்கிரஸ் ஆட்சியில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இந்தியச் சந்தை வெளிநாட்டுப் பொருட்களால் நிரம்பியது. ஆனால் நம் பொருட்களுக்கு அந்த நாடுகளில் சந்தை கிடைக்கவில்லை.

  • இதன் விளைவு? 2010-ல் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைவாக இருந்தது. ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2020-க்குள் அது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்திய உற்பத்தித் துறை நசுக்கப்பட்டது.

ஆனால் மோடி அரசு அப்படியல்ல. RCEP ஒப்பந்தம் நம் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் என்று தெரிந்ததும், கடைசி நிமிடத்தில் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து துணிச்சலாக வெளியேறியவர் பிரதமர் மோடி. இப்போது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திலும், நம் விவசாயத் துறை மற்றும் பால்வளத் துறை (Dairy Sector) பாதுகாக்கப்பட்டுள்ளது.

‘எங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே கையெழுத்து’ என்ற கெத்து, மோடி அரசின் தனித்துவம். விவசாயத்தையும் பால்வளத் துறையையும் அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார்கள்” என்று கிளப்பப்படும் பீதியில் துளியும் உண்மையில்லை.

பால்வளம் (Dairy) மற்றும் விவசாயம் போன்ற நம் நாட்டின் உணர்வுப்பூர்வமான துறைகள் இந்த ஒப்பந்தத்தில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. “இது எங்களின் Red Line இதில் சமரசம் கிடையாது” என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து, நமது விவசாயிகளின் நலனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதாகச் சொல்வது அப்பட்டமான பொய். எங்கே நமக்குத் தேவையோ, எங்கே நம் தொழில்களுக்குப் பாதிப்பு இல்லையோ, அங்கு மட்டுமே வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *