IPL: “தரமான வீரர்களை பிற அணிகள் எடுப்பது பொறாமையாகத்தான் இருக்கும். ஆனால்.!”- ஸ்டீபன் பிளெமிங்|“Watching quality players being picked up by other teams does make you feel envious. But…!” — Stephen Fleming

Spread the love

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது.

எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ” சில சமயங்களில் கடந்த கால வெற்றிகளை வைத்து சில கோட்பாடுகளையும், தத்துவத்தையும் மாற்றாமல் அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்போம்.

மாற்றம் அவசியம்

அதனால் இந்த முறை மாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். மேலும் கடந்த சீசனில் நாங்கள் செய்த தவறுகள் தான் இப்போது மாற்றத்தை முன்னெடுக்க எங்களுக்கு உதவியது” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ” தரமான வீரர்களை பிற அணிகள் ஏலத்தில் எடுப்பதை பார்க்கும்போது சற்று பொறாமையாகத்தான் இருக்கும். ஆனால், ஏலத்தில் கட்டுப்பாடு முக்கியம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *