வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிசிசிஐ-யும் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா “Times Of India’ ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.
“சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அந்த முடிவுக்கு பிசிசிஐ அனுமதிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.