தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆகிய இடங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 90 சதவீதம் பெண் தொழிலாளர்களே தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் முக்கிய மூலப்பொருளான மெழுகுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி விலையும் உயர்ந்துள்ளது. தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மெழுகு ஈரானில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.