அந்த அறிக்கையில், “‘ஜனநாயகன்’ ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள்.
படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.