நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள `ரிவால்வர் ரீட்டா” படத்தின் புரொமோஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த நடனக் கலைஞர்” எனக் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கீர்த்தியின் கருத்து சிரஞ்சீவியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷிடம் விஜய்யை ஏன் சிறந்த டான்ஸராகக் கருதுகிறீர்கள் என்றும், இது நடிகர்களின் தோற்றத்தைப் பற்றிய உங்கள் கருத்தா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
Keerthy Suresh நேரடி பதில்
அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “யார் பார்க்க நன்றாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல. நான் விஜய்க்கு எந்த அளவு பெரிய ரசிகை என்று சிரஞ்சீவி அவர்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நான் சிரஞ்சீவி சாரை நேசிக்கிறேன், அவருடன் பணிபுரிவதையும் நேசிக்கிறேன், அவரை நான் மதிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.