LIK: “என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!” – விக்னேஷ் சிவன் |”I owe a debt of gratitude to Pradeep Ranganathan – Vignesh Shivan

Spread the love

விக்னேஷ் சிவன் பேசுகையில், “ஒரு நாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி, கதை சொல்லணும்னு சொன்னேன். அவருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கிறதுல தாமதமாகிட்டே இருந்தது.

அந்த சமயத்துல பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு பெரிய படத்தை டைரக்ட் செய்யுறதுக்கான வாய்ப்புக் கிடைச்சது. அதுபோல, நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா எனக்குக் கொடுத்த வார்த்தைக்காகவும், எனக்காகவும் காத்திருந்தார்.

என்னுடைய கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்.” என்றவர், “‘நானும் ரெளடி தான்’ படத்தை பாண்டிச்சேரில எடுக்கணும்னு ஆசை இருந்தது.

விக்னேஷ் சிவன் - எல்.ஐ.கே

விக்னேஷ் சிவன் – எல்.ஐ.கே

அந்த நேரத்துல பாண்டிச்சேரில தங்கி கதையை ரெடி பண்றதுக்கு என்கிட்ட பெருசா காசு இல்ல. அந்த நேரத்துல அனிருத்கிட்ட சொல்லிட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பிட்டேன்.

அப்போ என்கிட்ட பஸ்ல போகுறதுக்கு 250 ரூபாய் பணம் மட்டும்தான் இருந்தது. நான் பஸ்ல போயிட்டு இருக்கும்போது அனிருத் எனக்கு மெசேஜ் பண்ணினார்.

அவர் ‘பேக்ல 50,000 ரூபாய் பணம் வச்சிருக்கேன்’னு சொன்னார். அந்த நேரத்துல நான் கண்கலங்கிட்டேன்.” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *