LPG சிலிண்டர் தட்டுப்பாடு:“ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க…” – எடப்பாடி பழனிசாமி சொல்லும் ஆலோசனை | LPG cylinder shortage Edappadi Palaniswami’s advice

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் சிலிண்டரை பதுக்குவதை தடுக்க வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்

சிலிண்டர்

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஹோட்டல் துறை கடுமையாக பாதித்து இருக்கிறது. இதுபோன்ற நிலை தமிழ்நாட்டின் சிலப் பகுதிகளில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *