Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான மதுரோவின் ஆன்மிக தொடர்பு!

Spread the love

1974 ஆம் ஆண்டிலிருந்து இங்கு சத்ய சாய்பாபா அமைப்பு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க படையால் பிடிபடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மதுரோ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை பகிரங்கமாக நினைவு கூர்ந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் சத்ய சாய்பாபாவை “ஒளியின் மனிதர்” என்று விவரித்தார். அவர் தனது அறிக்கையில், “‘நான் எப்போதும் அவரை நினைவில் கொள்கிறேன். இந்த சிறந்த ஆசிரியரின் ஞானம் தொடர்ந்து எங்களுக்கு அறிவூட்டட்டும்” என்று அவர் கூறினார். மதுரோவின் அரசியல் சர்ச்சைகள் அதிகரித்தாலும், சத்ய சாய்பாபாவுடனான அவரது ஆன்மிக தொடர்பு அவரது பொது வாழ்க்கையுடன் அமைதியாக தொடர்ந்தது.

பஸ் டிரைவராக இருந்து உலக தலைவரான மதுரோ

1962ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த மதுரோ, 1990 களின் முற்பகுதியில் பேருந்து ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் தோல்வியடைந்த ஹ்யூகோ சாவேஸின் ஆரம்பகால ஆதரவாளராக மதுரோ செயல்பட்டார். 2013 இல் சாவேஸின் மரணத்திற்குப் பிறகு மதுரோ தேசிய பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் வெளியுறவு அமைச்சராகவும், இறுதியில் ஜனாதிபதியாகவும், அரசியல் தரவரிசையில் படிப்படியாக உயர்ந்தார். அவரது பதவிக்காலத்தில் பொருளாதார சரிவு, பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை மற்றும் நீடித்த அரசியல் அமைதியின்மை போன்றவற்றால் வெனிசுலா திண்டாடியது.

2013 இல் பணவீக்கம் அதிகரித்ததால், மதுரோ வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் கடைகளை ஆக்கிரமிக்க ராணுவத்தை அனுப்பினார். 2018 ஆம் ஆண்டில், கராகஸ் அவென்யூவில் அவர் உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் வெடிபொருள்கள் நிறைந்த ட்ரோன்களை அனுப்பி தீவிரவாதிகள் படுகொலை செய்ய முயன்றனர்.

அவரது வாழ்க்கை முழுவதும், சிலியா புளோரஸ் வெனிசுலாவின் அதிகார அமைப்பில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அட்டர்னி ஜெனரல் மற்றும் பாராளுமன்றத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *