Major setback for opposition parties in the Maharashtra municipal elections: Unprecedented victory for the BJP-மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்லில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜ.கவுக்குவரலாறு காணாத வெற்றி

Spread the love

இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் 8 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. உல்லாஸ் நகர் மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) 17 வார்டுகளிலும், பா.ஜ.க 6 வார்டுகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. பீவாண்டி மாநகராட்சியிலும் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. சாம்பாஜி நகர் மாநகராட்சியில் பா.ஜ.க 24 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே)18 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

நாக்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 151 வார்டுகளில் 101 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இது தவிர கோலாப்பூர் மாநகராட்சியை பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் சேர்ந்து கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. சோலாப்பூர், அகோலா, நாண்டெட், சாங்கிலி, ஜல்காவ், அகில்யா நகர், துலே, ஜல்னா, இசல்கரஞ்சி போன்ற மாநகராட்சிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

அமராவதி மற்றும் லாத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. மாலேகாவ் மற்றும் தானே மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு ஒன்று பட்டு இருந்த சிவசேனா அதிக மாநகராட்சிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது அந்த மாநகராட்சிகளை இரண்டு சிவசேனாக்களும் சேர்ந்து பா.ஜ.கவிடம் இழந்துள்ளன. இத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மொத்தமுள்ள 2869 வார்டுகளில் 1081 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 293 இடங்களிலும், காங்கிரஸ் 191 இடங்களிலும், சிவசேனா(உத்தவ்) 137 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 119 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *