14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை இன்று (டிச.17) பார்வையிட்டிருக்கிறார்.
விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுப் பண்டங்களை அளித்திருக்கிறார்.

லியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
மேலும் வந்தாரா மையத்தில் நடைபெற்ற சில பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்துகொண்டிருக்கிறார்.