மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. எல் மென்ச்சோ கூட்டாளிகள் விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர். எப்போதும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் எல் மென்ச்சோ எப்படி ராணுவத்தின் பார்வையில் சிக்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அங்குள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தில் இருக்கும் தபல்பா என்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்கியதில், எல் மென்ச்சோ படுகாயம் அடைந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் அவர் இறந்துவிட்டார். இந்த ராணுவ நடவடிக்கையில் மேலும் 70 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா எல் மென்ச்சோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மெக்சிக்கோ அரசை தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்தது. அதோடு மெக்சிக்கோ நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்களே களத்தில் இறங்குவோம் என அமெரிக்கா எச்சரிக்கை செய்தது.
இதையடுத்து எல் மென்ச்சோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மெக்சிக்கோ தள்ளப்பட்டது. எனவே எல் மென்ச்சோவின் நடவடிக்கையை மெக்சிக்கோவும், அமெரிக்காவும் தீவிரமாக கண்காணித்து வந்தன. அவன் எங்கு இருக்கிறான் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து எல் மென்ச்சோவின் காதலி ஒருவரை ராணுவத்தினர் கண்காணித்து வந்தனர். இறுதியில் அப்பெண்ணை பிடித்து அவரை பலத்த பாதுகாப்புடன் எல் மென்ச்சோவின் மலை நகரமான தபல்பாவிற்கு அனுப்பி வைத்தனர்.