மைதானம் பேட்டிங்கில் சாதகமாக இருப்பதை, எதிரணி வீரர்கள் ஆடுவதை பார்த்தே தெரிந்து கொண்டோம்.
ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்களைப் பாராட்ட வேண்டும். அவர்கள் ஆட்டத்தை நன்றாகக் கட்டுப்படுத்தினார்கள்.
எங்கள் அணியின் முதல் இரண்டு பேட்டர்களான ரோஹித் மற்றும் ரிக்கெல்டன் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.
ரோஹித் ஆடிய விதம் மற்றும் அவர் அடித்த ஷாட்கள் அபாரமானவை. அதேபோல் ரிக்கெல்டனும் அருமையாக விளையாடினார்.

அதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷர்துல் தாக்கூரிடம் அடிக்கடி அணிகளை மாற்றியது போதும், உன்னுடைய கிரிக்கெட் பயணம் முடியும் வரை நீ இதே அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சொன்னேன்.
அவர் ஒரு சுவாரசியமான மனிதர், பெரிய மனது கொண்டவர். அவர் களத்திற்கு வந்து பேட்டர்களைத் தன் புத்திசாலித்தனத்தால் வீழ்த்த முயலும் விதம் அற்புதம்” என்று பேசியிருக்கிறார்.