13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மும்பை அணியில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, சூர்யா குமார் யாதவ், திலக் வர்மா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த அணியாக களமிறங்கினாலும், டி20 உலகக்கோப்பையின் வின்னிங் கேப்டன் சூர்யா குமார் யாதவை இம்பாக்ட் பிளேயர் ஆக களமிறக்கினர்.
எதிர் புறத்தில் 25 கோடிக்கு ஏலத்தில் வாங்கிய கேமரோன் க்ரீன், கேப்டன் அஜிங்க்யா ரஹானே, கடந்த டி20 உலகக்கோப்பையில் அதிவேக சதமடித்த ஃபின் அலன்,வருண் சக்கரவர்த்தி,ரிங்கு சிங், சுனில் நரேன், போன்ற பலமான அணியாக களமிறங்கியது கொல்கத்தா அணி.
கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாகிய ரஹானே மற்றும் அலன் இணைந்து ஆட்டத்தின் தொடக்கத்திலயே ஆறு, நான்கு, என பறக்க விட்டு பவர் பிளேவை அதிரடியாக ஆடினர்.

ஐந்து ஓவர்களில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட்டின் தேடலில் இருந்த மும்பை அணியினருக்கு ஷர்துல் தாக்கூரின் மூலம் பவர் பிளேவின் கடைசி ஓவரில் ஃபின் அலன் 37(17) தனது விக்கெட்யை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 18 ரன்கள் எடுத்து ஒன்பதாவது ஓவரில் அதே ஷர்துல் தாக்கூரின் பந்தில் ஆட்டமிழந்தார், எதிர் முனையில் ரஹானே கியரை மாற்றாமல் அரை சதம் கடந்து அவுட் ஆக, ரகுவன்ஷி (51), ரிங்கு சிங்(33),
ரமன்தீப் (4) என , நான்கு விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து, 221 என்ற இமாலய இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி.
இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரிக்கெல்டேன், கொல்கத்தா பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 148 ரன்களைக் குவித்தனர்.

ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி (78)ரன்களுக்கு அவுட் ஆகினார்,
ரிக்கெல்டேன் (81),
சூர்யா குமார் யாதவ் (16),
திலக் வர்மா (20),
ஹர்திக் பாண்டியா (18),
நமன் தீர் (5)
ரன்கள் விளாசி, 221 என்ற கடினமான ஸ்கோரை 6 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி பிடித்து, 13 வருடமாக தனது முதல் போட்டியை வெற்றியே பெறாத அணியாக இருந்த மும்பை, இந்த வெற்றியின் மூலம் அந்த ஸ்ட்ரீக்யை முறியடித்துள்ளது.