இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் “மௌனம் பேசியதே’.
காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது.
சில தினங்களுக்கு முன்பு ‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா லைலா வீடியோ வெளியிட்டிருந்தனர்.

தற்போது த்ரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே’ பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகப்போகிறது.
கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் ஸ்பெஷலாக இருக்கிறது.
எப்போதுமே இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம் தான். ஏனென்றால் இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது.