Mrunal: “அவர் வருவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை”- தனுஷ் குறித்து மிருணாள் தாகூர் | Mrunal Thakur about dhanush

Spread the love

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் சமீபத்தில் “India Today’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த மிருணாள் தாகூர், “யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன.

சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம்” என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

மிருணாள் தாகூர் - தனுஷ்

மிருணாள் தாகூர் – தனுஷ்

இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூரிடம் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “தனுஷ் சாரின் ‘ராயன்’, ‘மாரி’, ‘ராஞ்சனா’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களை பார்த்த பின் அவரது ரசிகையாக மாறிவிட்டேன்.

குறிப்பாக ‘அசுரன்’ படத்தை பல முறை கூட பார்ப்பேன். அவர் ஒரு கலைக்கூடம் போன்றவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *