கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.
சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது.
அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது.

இதற்கு மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கடந்த மாதம் சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வென்று அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றியது.
இந்த நிலையில், தான் கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில் இருந்த 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான தோனி, இந்திய மகளிர் அணியும் ஆடவர் அணியும் இன்னும் 100 கோப்பைகளை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியதோடு, தன் கிரிக்கெட் வாழ்வின் மிக நெகிழ்வான தருணம் குறித்து பேசியுள்ளார்.