திட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்த பாஜக
நிதிஷ் குமாரின் ‘மகா தலித்’ மற்றும் ‘EBC’ (பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்) வாக்கு வங்கிகளைத் தன்பக்கம் இழுக்கப் பல்வேறு சமூக நலத் திட்டங்களை மத்திய அரசு மூலம் நேரடியாக மக்களிடம் கொண்டு சென்றது. மத்திய அரசின் நேரடிப் பணப்பரிமாற்றம், இலவச அரிசி, உஜ்வாலா கேஸ் போன்ற திட்டங்கள் பெண்களிடையே பாஜகவிற்குப் பெரும் ஆதரவைத் தேடித்தந்தன. மேலும் மதுவிலக்கு சட்டம் போன்ற நிதிஷின் சில முக்கிய முடிவுகளில் பாஜக அமைச்சர்கள் பகிரங்கமாகவே விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர்.

பீகார் அரியணையில் பாஜக
இது நிதிஷ் குமாருக்குத் தன் சொந்த அரசாங்கத்தின் மீதே முழு அதிகாரம் இல்லை என்கிற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இதன் முடிவு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. அந்தத் தேர்தலில் பாஜக 89 இடங்களை வென்று கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை பெற்று இடத்தை பெற்றது.
2005-ல் நிதிஷ் குமாரின் தோள்களில் ஏறி பீகாரில் கால்பதித்த பாஜக, இன்று அதே நிதிஷ் குமார் வியந்து பார்க்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து பீகார் அரியணையில் அமர இருக்கிறது.
நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் விலகியதைத் தொடர்ந்து, பீகாரில் முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. பாஜக கைப்பற்றும் மாநிலங்களில் இன்று பீகாரும் இணைந்திருக்கிறது.!