அசெட் அலோகேஷன் செய்யுங்க பாஸ்…
இந்த மூன்று முதலீடுகளில் உள்ள பாசிட்டிவான, நெகட்டிவான விஷயங்களைப் பார்த்துவிட்டோம். அப்படியானால், இவற்றில் எது பெஸ்ட் என்று கேட்டால், ஏதோ ஒன்றை மட்டும் தேர்வு செய்வது சரியான விஷயமாக இருக்காது. ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளர், தன்னிடம் இருக்கும் பணத்தைத் தான் எடுக்க நினைக்கும் ரிஸ்க்கிற்கேற்ப இந்த மூன்றிலும் பிரித்துப்போடுவாரே தவிர, எல்லாப் பணத்தையும் ஒரே முதலீட்டில் போட மாட்டார். உதாரணமாக, உங்களிடம் ஒரு வீடு கூட இல்லையா? நீங்கள் குடியிருக்கப் போகிறீர்கள் எனில், உங்கள் சொந்தத் தேவைக்கு ஒரு வீட்டையாவது வாங்குவது அவசியம். ஆனால், ஒரு வீட்டை வாங்கியபின் அடுத்தடுத்து வீடுகளை மட்டுமே வாங்கி முதலீடு செய்வது கூடாது. இது தவறான முதலீட்டு முறை ஆகும்.
அதே போல, தினப்பயன்பாட்டுக்குப் பயன்படுகிற மாதிரி ஒருவர் 10 முதல் 20 சவரன் அளவுக்கு மட்டுமே தங்கம் வாங்கி வைத்துக்கொள்ளலாமே தவிர, 100 பவுன், 150 பவுன் என்று சேர்த்துவிட்டு, அதைப் பாதுகாக்க முடியாமல் தவிக்கக்கூடாது. அதே போலத்தான், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும். எல்லாப் பணத்தையும் அதில் மட்டுமே வைத்திருக்கக்கூடாது.
ஒருவருடைய மொத்த போர்ட்ஃபோலியோவில் 60% முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும், 20% தங்கத்திலும், 20% ரியல் எஸ்டேட்டிலும் இருக்கலாம். உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறது, இனிவரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு, உங்கள் முதலீட்டு முடிவை அமைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் நீங்கள் செல்வம் சேர்க்க முடியும் என்பதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரும் கவனிக்கத் தவறக்கூடாது!
இறுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது — முதலீடு என்பது லாபம் மட்டும் அல்ல, திட்டமிடப்பட்ட நிதி பயணம். சரியாக அசெட் அலோகேஷன் செய்து முதலீடு செய்தால் மட்டுமே வெளிநாட்டு வருமானம் இந்தியாவில் ஒரு வலுவான செல்வமாக மாறும்.