ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான் அரசின் விமானப் படை.
கடந்த 6-ம் தேதியில் இருந்து பாகிஸ்தானில் 3 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றிற்கு ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழும் தீவிரவாதிகளே காரணம் என்று குற்றம்சாட்டி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் தாலிபன் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குச் சொந்தமான ஏழு தீவிரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை உளவுத்துறை அடிப்படையிலான தகவலின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளதாவது…
“பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.