PCR case registered against 5 students for caste-based attack on student in Thoothukudi – தூத்துக்குடியில் மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது பி.சி.ஆர் வழக்குப்பதிவு

Spread the love

ஆனால், இப்படி ஒரு கொடுமை நடக்கிறது. பள்ளியில் என்னுடைய மகன் மூக்கில் இருந்து ரத்தம் வரும் வரை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். ஆனால், எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருக்க வைத்து மாலைதான் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டான். இதனால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மகனுக்கு பாதுகாப்பு வேண்டும்” எனப் பேசினார். அவருக்கு ஆறுதல் கூறிய அவர், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட எஸ்.பியிடம் பேசுவதாகக் கூறியுள்ளார்.

தட்டார்மடம் காவல் நிலையம்

தட்டார்மடம் காவல் நிலையம்

இது குறித்து மாவட்ட எஸ்.பி., மதனிடம் பேசினோம், ”பள்ளியில் சக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவரை சக மாணர்கள் 5 பேர் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார். அந்த மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில்  தாக்குதலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 5 பேர் மீது தட்டார்மடம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது” என்றார்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *