தினகரனை தாக்கிய இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோட்டில் ஒரே பைக்கில் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து இருவரையும் பிடிக்கச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் பைக்கில் இருவரும் வேகமாகச் செல்ல, போலீஸாரும் அவர்களை பின் தொடர்ந்தனர். சுமார் 7 கி.மீ தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், பாக்கியலெட்சுமி நகரைச் சேர்ந்த பிரேம்குமார், பாத்திமாநகரைச் சேர்ந்த அந்தோணி பென்கர் அவர்கள் என்பது தெரிய வந்தது. இதில், பிரேம்குமார் மீது குளத்தூர், ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளன. அதேபோல அந்தோணி பென்கர் மீதும் தென் பாகம் மற்றும் புதுக்கோட்டை காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து தினகரனின் செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.