பொங்கல் பரிசு பெற இன்றே கடைசி நாள்

1345347
Spread the love

பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டது.
நேற்று வரை(17-ந்தேதி)சுமார் 75 சதவீதம ரேசன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்று உள்ளனர். ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறதாவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று(18ந்தேதி) மாலை வரை பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *