வாஷிங்டன் டி.சி.யில் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதாவது, “அமெரிக்கா, நம்பிக்கையின்பால் நிறுவப்பட்ட தேசம். இதனை நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். எப்போது நம்பிக்கை வலுவிழக்கிறதோ, நமது தேசமும் வலுவிழக்கும்.
நம்பிகை பலப்படும்போது, அதாவது இப்போது இருப்பதைப் போன்ற சூழலைச் சொல்லலாம், நமக்கு மிக நல்ல காலமாக அமைந்திருக்கிறது.
டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், நாம் நமது உரிமைகளை பாதுகாக்கிறோம்; கடவுளின் கீழ் இயங்கும் தேசமாக நமது அடையாளத்தை திரும்பச் செய்கிறோம். கடவுளின் கீழ், நாம் ஒரு தேசமாக இருக்கிறோம், எப்போதும் அப்படித்தான்” என்றார்.