சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை 05-12-2025ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறப்படுகிறது.

இதுதவிர இன்று காலை வெளியான வானிலை அறிக்கையின்படி, “இன்று இடியுடன் கூடிய கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும்.
மிதமான மழை விழுப்புரம், கடலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
பருவமழை டிசம்பர் 9 அல்லது 10ஆம் தேதிகளில் அடுத்த மழையைக் கொண்டுவரும்” என்று கூறப்பட்டிருக்கிறது.