அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரணதுங்கா

Save 20240717 142526
Spread the love

இலங்கை அணிக்காக 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரணதுங்கா. இவர் 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்திய கேப்டன் கபில்தேவை சமீபத்தில் சந்தித்தார்.

இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில் ரணதுங்கா மிகவும் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காட்சி தருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது.
வழக்கமாக மிகவும் பருமனான தோற்றத்தில் இருந்த ரணதுங்கா இந்த அளவுக்கு மெலிந்து இருப்பது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரணதுங்காவின் உடல் மெலிந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதை நம்ப முடியவில்லை என்று கூறுகின்றனர்.
2000-ம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரணதுங்கா அதன்பிறகு இலங்கை நாட்டு அரசியலில் ஈடுபட்டார். எம்.பி,யாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *