RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?

Spread the love

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மற்றும் பெங்களூர் அணி சமீபத்தில் விற்பனைக்கு வந்தது.

இதில் ராஜஸ்தான் அணியை அமெரிக்க தொழிலதிபர் மற்றும் வால்மார்ட், ஃபோர்டு போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குதாரர் ஆன கல் சோமானி 13,500 கோடிக்கு வாங்கினார்.

ராஜஸ்தான் அணியை வாங்கிய கல் சோமானி
ராஜஸ்தான் அணியை வாங்கிய கல் சோமானி

ராஜஸ்தான் அணியை தொடர்ந்து தற்போது ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் BXPE ஆகிய நிறுவனங்கள் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கி இருக்கின்றன.

இதற்கு முன்பு பெங்களூரு அணியை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்களான, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பங்கு முதலீட்டு நிறுவனமான EQT, மற்றும் மணிப்பால் ஹாஸ்பிடல் நிறுவனம் ஆகியவை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆதித்யா பிர்லா குழுமம்
ஆதித்யா பிர்லா குழுமம்

இந்நிலையில் தற்போது 16,700 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் BXPE ஆகிய நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்கியிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *