இந்த மைதானங்கள் (பெங்களூரு) சில பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானவை அல்ல, எனவே எதிரணியைத் தொடர்ந்து அட்டாக் செய்ய வேண்டும் என்ற மனநிலையை வைத்திருக்க வேண்டும்.
அதே சமயம், ஒரு வீரராக நமது பலத்தை மறந்துவிடக் கூடாது. போட்டியை வென்று கொடுப்பவராக இருப்பதுதான் முக்கியம்.
ஒவ்வொரு போட்டியிலும் என்னால் ரன் எடுக்க முடியாது என்று எனக்குத் தெரியும், அது யாராலும் முடியாது.
ஆனால், விளையாடும்போது ஆட்டத்தில் எவ்வளவு தாக்கத்தை (impact) ஏற்படுத்த முடியுமோ, அந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
உண்மையைச் சொல்லப்போனால் நேற்றையப் போட்டியில் நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.
எங்களது இன்னிங்ஸின் இரண்டாவது 10 ஓவர்களில், அவர்கள் சில நேரங்களில் எங்களை நன்றாகக் கட்டுப்படுத்தினார்கள்” என்று பேசியிருக்கிறார்.