உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் வீடு அப்பெண்ணின் வீட்டில் இருந்து 7 வீடு தள்ளி இருக்கிறது. அப்பெண்ணின் பெற்றோர் காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு வீட்டில் அப்பெண் மட்டும் தனியாக இருந்தார்.
உடனே தனது காதலனுக்கு போன்செய்து வீட்டில் யாரும் இல்லை என்று கூறி உடனே தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அந்த வாலிபரும் உடனே காதலி வீட்டிற்கு வந்தார். ஆனால் அந்த வாலிபர் காதலி வீட்டிற்குள் செல்வதை இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் உறவுக்கார பெண் ஒருவர் பார்த்துவிட்டார்.
இதனால் வீட்டிற்குள் யார் சென்றது என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்பெண், இளம்பெண் வீட்டிற்கு வந்தார்.வீட்டுக்கதவை அப்பெண் தட்டியபோது இளம்பெண் வந்து கதவை திறந்தார். உடனே வீட்டிற்குள் சென்று அப்பெண் சோதித்து பார்த்தார்.
ஆனால் வீட்டில் யாரும் இல்லை. ஆனால் வீட்டிற்குள் ஒரு ஆண் நுழைவதை நான் பார்த்தேன் என்று அப்பெண் தெரிவித்தார். வீட்டிற்குள் யாரும் இல்லை. உள்ளே நுழைந்தவர் கரைந்தா போய்விட்டார் என்று இளம் பெண் கூறியுள்ளர். அப்பெண்ணிற்கு தனது சந்தேகம் தீரவில்லை. வீட்டின் மெயின் கதவை பூட்டிவிட்டு இளம் பெண்ணின் தாயார் மற்றும் சகோதரனுக்கு தகவல் கொடுத்து வரவைத்தார். அவர்கள் வந்து பீரோ, படுக்கை, மாடி என அனைத்து இடங்களிலும் சோதித்து பார்த்தனர். ஆனால் எங்கேயும் வீட்டிற்குள் நுழைந்த நபரை காணவில்லை.