இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கான படிவத்தை இப்போதுதான் கொடுக்கிறார்கள். BLO க்கள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார். ‘தூய்மைப் பணியாளர்களை BLO க்களாக பயன்படுத்துகிறார்கள்.’ என பாஜகவும் குற்றஞ்சாட்டியது. ‘குறுகிய காலத்தில் செய்வதால்தான் இப்படியொரு குழப்பம். தேர்தல் அதிகாரிகள் சொல்வது BLO க்களுக்கு சென்று சேரவில்லை. ஆளுக்கொரு அதிகாரம் செய்கிறார்கள்.’ என நாதக குற்றஞ்சாட்டியது.

S.I.R யை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கூட இன்றைக்கு சில ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுக மற்றும் காங்கிரஸை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் அலுவலரிடம் S.I.R குறித்து எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்காதது கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளையே குழம்ப வைத்திருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் S.I.R குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் S.I.R யை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தனர்.