SIR: “மன அழுத்தமும் தற்கொலை எண்ணம் அதிகரித்திருக்கிறது” – ABRSM அமைப்பு கீதா பட் | SIR: “Depression and suicidal thoughts have increased” – ABRSM organization Geeta Bhat

Spread the love

இரண்டாவதாக, BLO செயலி மற்றும் போர்ட்டலின் அடிக்கடி செயலிழப்பு, நெட்வொர்க் இணைப்பு இல்லாமை, OTP தோல்விகள், தரவு பதிவேற்ற தோல்விகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இல்லாமை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் BLOக்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வளங்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

மூன்றாவதாக குறுகிய காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சம்பளத்தை நிறுத்தி வைப்பது, அதிகாரத் தொனியில் கேட்கப்படும் மரியாதையற்ற கேள்விகள், குற்றப்பத்திரிகைகள், இடைநீக்கங்கள், FIR அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோக நடத்தை ஆகியவற்றையும் BLOக்கள் எதிர்கொள்கின்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

பணியின் போது உருவாக்கப்படும் இந்த அச்சுறுத்தும் சூழல், தேர்தல்களின் கண்ணியத்திற்கும் ஆசிரியர் சமூகத்தின் மரியாதைக்கும் முரணானது.

நான்காவதாக, BLOக்கள் பெரும்பாலும் பொதுமக்களின் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலான மக்களிடம் அவர்களின் 20 ஆண்டு பழமையான ஆவணங்கள் இல்லை. அதனால் அவர்கள் BLOக்களுக்கு ஒத்துழைப்பதில்லை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இந்த SIR குறித்து தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு போதுமான அளவு கற்பிக்கவுமில்லை. சில இடங்களில் மக்கள் இது தேவையற்றது என்றும் நினைக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *