குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 2,000 படிகள் கொண்ட இம்மலைக் கோயிலுக்கு பக்தர்கள் நடந்து சென்றும், நடக்க இயலாதவர்கள் ரோப்கார் மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மலை உச்சியிலுள்ள காளி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இரண்டு வழித்தடங்களில் ரோப்கார்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொருள்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் ரோப்காரில் மலைக்கோயிலிருந்து கீழே சென்றுகொண்டிருந்த பணியாளர்கள் 6 பேர், நடுவழியில் கேபிள் அறுந்ததால் கீழே விழுந்து உயிரிழந்தனர்.