ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “இந்த துப்பாக்கிச் சூட்டைத் தடுத்தவர்கள் அனைவரும் ஹீரோக்கள்” எனப் பாராட்டியிருக்கிறார்.
பான்டி கடற்கரை அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ்,
“நான் இதுவரை பார்த்திராத மிகவும் நம்பமுடியாத காட்சி இது. சமூகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை எதிர்த்து, எண்ணற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தனது சொந்த உயிரைப் பணயம் வைத்து, தனியொரு ஆளாக அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறித்துள்ளார்.
அந்த மனிதர் ஒரு உண்மையான நாயகன். அவருடைய வீரத்தின் விளைவாக இன்று பல மக்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.’
இந்தக் கொடூரமான சூழலிலும், முற்றிலும் அறிமுகமில்லாதவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கும் அற்புதமான, துணிச்சலான ஆஸ்திரேலியர்கள் இன்னும் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை அஹமது அல் அஹமது வை “பல உயிர்களைக் காப்பாற்றிய ஒரு நாயகன்” என்று குறிப்பிட்டது.
ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.