அத்தனை விஷயங்களும் அத்துப்படி
குஜராத், பும்ரா பிறந்து வளர்ந்த ஊர். அங்கே அவருக்கு அத்தனை விஷயங்களும் அத்துப்படி. வேகமான டெலிவரிக்களை வீசாமல் ஸ்லோவாக யார்க்கிங் லெந்தில் வீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
`இப்படி வீசினால்தான் விக்கெட் எடுக்க முடியும் என எனக்கு தெரியும்” என போட்டிக்குப் பிறகு அத்தனை தெளிவாகப் பேசியிருந்தார்.
இறுதிப்போட்டி மட்டுமல்ல, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற காரணமாக இருந்த அரையிறுதி போட்டியிலும் 16 மற்றும் 18 வது ஓவரை வீசியிருப்பார்.
ஒரு தலைமுறைக்கான பௌலரே!
பெத்தேல் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அந்த வேளையில் ஒரு ஓவரில் 8 ரன்களையும் இன்னொரு ஓவரில் 6 ரன்களையும் மட்டுமே கொடுத்திருந்தார். பும்ரா இந்திய அணிக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இன்னமும் எதிரணியினருக்கு அவர் மீதான மிரட்சி போகவில்லை. பும்ராவின் மேஜிக்கும் தீரவில்லை. இன்றைக்கும் பேட்டர்கள் எதிரில் பும்ரா ஓடிவருவதைப் பார்த்தால் கொஞ்சம் நடுங்கவே செய்கின்றனர். அதுதான் பும்ரா. சூர்யா சொல்வதைப் போல பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!