T20 World Cup: "ரோஹித் சர்மாவை என் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்" – சூர்யகுமார் யாதவ்

Spread the love

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மார்ச்.8) அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

இந்தியாவும் – நியூசிலாந்தும் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கபில் தேவ், தோனி, ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் நான்காவது கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் நேற்று (மார்ச்.7) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் சூர்யகுமார் யாதவ், ” அணியை வழிநடத்துவது ஒரு மகிழ்ச்சியான உணர்வு.

சொந்த மண்ணில் இவ்வளவு அற்புதமான அணியை இறுதிப் போட்டியில் வழிநடத்துவது சிறப்பான அனுபவம்.

நிச்சயமாக, பதட்டங்கள் இருக்கும். இந்திய அணி உற்சாகமாக உள்ளது.

நாங்கள் எல்லாவற்றையும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறோம், சிக்கலாக்க விரும்பவில்லை.

இவ்வளவு பெரிய நிகழ்வில் இந்தியாவை வழிநடத்துவது எனக்கு ஒரு நீண்ட பயணம்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றிருக்கிறார்.

தொடர்ந்து, ரோஹித் ஷர்மா குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “ரோஹித் சர்மாவை ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், மூத்த சகோதரராகவும் வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்.

களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நான் முதலில் உதவிக்காக அழைப்பது ரோஹித் சர்மாவைத்தான்.

ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ்
ரோஹித் சர்மா – சூர்யகுமார் யாதவ்

இக்கட்டான சூழலிலும் ரோஹித் காட்டும் நிதானம் எனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்திருக்கிறது .

வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, ரோஹித்தின் குணாதிசயங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

நான் அவருடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் எப்படி வேலை செய்தார் என்பது எனக்குத் தெரியும்.

ரோஹித் தனது வீரர்களை எவ்வாறு அணுகுவாரோ அதே பாதையை நானும் பின்பற்றுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *