அவர், “அந்தக் கூட்டத்தில் அனைத்து நடிகர்கள் என சொல்லப்படவில்லை. அனைத்து நடிகர்களையும் சொல்லியிருக்கிறோம் என தவறாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கைதான் வைத்திருக்கிறோம். இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அ
வர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் ஓடிடி படங்கள், சீரிஸ்கள் என கவனம் செலுத்தினால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது.
அதுபோல, முன்னணி இயக்குநர்களும் ஓடிடியை தவிர்த்து தியேட்டருக்கான திரைப்படங்களை இயக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம்.” என்றவரிடம், “ஓடிடி-க்கு படம் தயாரித்தாலும் அது தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைதானே கொடுக்கும்.” எனக் கேள்வி எழுப்பினோம்.
இதற்கு பதிலளித்தவர், “தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, ஓடிடி ப்ராஜெக்ட்கள் மூலம் பெரியளவில் பலன் கிடையாது. ஓடிடி நிறுவனங்கள், அவர்களின் சொந்த தயாரிப்பாக, ஒரிஜினல் படைப்புகளைக் கொண்டு வருகிறார்கள்.
இதனால் தனிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் வாய்ப்பும் லாபமும் கிடைப்பதில்லை. எனவே, சினிமா துறையில் நலன் கருதி நடிகர்கள் தியேட்டருக்கான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஒருமித்த முடிவை எடுத்திருக்கிறோம். அனைத்து நடிகர்களுக்கும் இதை சொல்லவில்லை என்பது இங்கு தெளிவுபடுத்த வேண்டிய விஷயம்.” என்றார்.